districts

img

பெயிண்ட் ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்தது

அம்பத்தூர், ஜூலை 7-,

     சென்னை ராயப்பேட்டையில் இருந்து வானகரத்தில் பெயிண்ட் ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பெயிண்ட் சாலையில் கொட்டியது.

     சென்னை ராயப்பேட்டையில் இருந்து லோடு ஆட்டோ 50க்கும் மேற்பட்ட  பெயிண்ட் டின்கள், தின்னர்கள் உள்ளிட்ட வற்றை ஏற்றி கொண்டு திருப்பெரும்புதூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பெங்க ளூரு தேசிய நெடுஞ்சாலையில் வானகரம் அருகே செந்து கொண்டிருக்கும் போது,  ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்து ஆட்டோ  கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

    இதில் ஆட்டோவின் கண்ணாடிகள் முற்றிலும் நொறுங்கியது. டிரைவர் உயிர் தப்பிய நிலையில்  வண்டியில் இருந்த 50க்கும் மேற்பட்ட பெயிண்ட் டின்கள் சாலை யில் உருண்டு ஓடியது. மேலும் பெயிண்ட் சாலையில் கொட்டியதால் வாகன போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

     தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  போரூர் போக்குவரத்து காவல் துறை யினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனண நடத்தி வருகின்றனர்.