திருவள்ளூர், ஜன.28- பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி எல்என்ஜி கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் செவ்வாயன்று (ஜன 28), கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கல்லூரியில் தற்காலிக ஆசிரி யர்கள் மற்றும் பணியாளர்கள் 75 பேர் பணி செய்து வருகின்றனர். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கிட உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அதனை வழங்க கோரியும் உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் பணியாற்றும் 75 ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தரக் கோரியும் ஒரு நாள் அடையாளம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கல்லூரி வாயிலின் முன்பு நடைபெற்றது.