districts

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை, ஜூன் 15-

     திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே  கடந்த 2021 ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியை ராமன் என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் செய்தார்.  

     விசாரணை நடத்திய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராத மும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து ராமனை காவலர்கள் வேலூர் சிறையில் அடைத்தனர்.