வேலூர், செப்.4- பொதுத்துறை நிறுவனம் எல்ஐசியின் 68 ஆம் ஆண்டு வார விழாவை முன்னிட்டு, ஓசூர் கிளை அலுவலகத்தில் அலுவலர்கள், முகவர்கள்,காப்பீடு தாரர்களுக்கு இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. முதன்மை மேலாளர் எஸ்.ரங்கநாதன், நிர்வாக மேலாளர் உன்னி கிருஷ்ணன் முன்னிலையில் ஓசூர் வாசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் கண்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு என சுமார் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.