districts

img

புதுச்சேரியில் எல்ஐசி ஊழியர்கள் வெள்ள நிவாரண உதவி

புதுச்சேரி, டிச.21- பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் எல்ஐசி ஊழியர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.  பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி சேர்ந்த மண்ணாடிபட்டு, பாகூர், வில்லியனூர், புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தென் மண்டல இணை செயலாளர் கோபிநாத், வேலூர் கோட்டச் சங்க துணை தலைவர்  ராமன், இணை செயலாளர்கள் வேலாயுதம், ரஃபீக் அகமது, கோட்டச் சங்க பொருளாளர் கணேசன், சிஐடியு புதுச்சேரி  மாநிலத் துணைத் தலைவர் கொளஞ்சியப்பன், புதுச்சேரி எல்ஐசி ஊழியர் சங்க கிளைகள் நிர்வாகிகள் நாகராஜன், மனோகர்,ஆனந்தி,அகிலன் உள்ளிட்ட எல்ஐசி ஊழியர்கள்  நிகழ்ச்சியில் பங்கேற்று, புயல் மழையால்  பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்கு தேவையான  அரிசி,பருப்பு சமையல் எண்ணெய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கினர்.