ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து ராணிப்பேட்டையில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அரக்கோணத்திலும் வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.