districts

img

பாலின சமத்துவ நடைக்கான பிரச்சாரம் துவக்கம்

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நவ.16 அன்று இரவு அண்ணா சாலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை பாலின சமத்துவ நடை நடைபெறுகிறது. ‘இரவும் எமக்கானதே’ எனும் முழக்கத்தோடு நடைபெறும் இந்த இயக்கத்திற்கான பிரச்சாரத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் வெ.தனலட்சுமி, எஸ்.வி.வேணுகோபாலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.மிருதுளா, எஸ்.மனோன்மணி, ஏ.நாகராணி, அ.பிரியதர்ஷினி  எம்.சி., உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.