districts

img

கும்மிடிப்பூண்டி பிரித்வி நகர் சாலையை விரிவாக்கம் செய்யக் கோரிக்கை

திருவள்ளூர், மே 27-

     கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள பிரித்வி நகர் சாலையை விரி வாக்கம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி அப் பகுதி மக்கள் பிடிஒ அலு வலகத்தில் வெள்ளியன்று (மே-26)  மனு அளித்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பிரித்வி நகரில் 26 கும் மேற்பட்ட தெருக்களில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நடுத்தர மக்கள் வசிக்க கூடிய பகுதி என்பதால்,  இங்கு பெரும்பாலான வீடு களில் கார் போன்ற வாகனங்கள் வைத்துள்ள னர். தேசிய நெடுஞ்  சாலையை ஒட்டி உள்ள பிர தான நுழைவு வாயிலாக உள்ள பிரித்வி நகர் சாலை யில் தற்போது ஊராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது.20 அடி அகலம் கொண்ட சாலையை,  வெறும் 12 அடியாக சுருக்கி உள்ளனர்.

   இரண்டு 4 சக்கர வாக னங்கள் எதிர் எதிரே வந்தால், ஒதுங்க கூட இடமில்லாத நிலை உள்ளது. மேலும் தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலையால் மழைக் காலங்களில் மழைநீர் வீடு களுக்குள் புகும் அபாயம் உள்ளது. மழை நீர் கால்வாய் அமைக்கப் பட்டாததால் வெள்ள நீர் சூழும் ஆபத்து உள்ளது. எதையும் திட்டமிடாமல் சாலை அமைப்பதால் அப்பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும். அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட உள்ளே சென்று வெளியே வரமுடியாத நிலை உருவாகும். எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையை சுருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரித்வி நகர குடியிருப்பு வாசிகள் வலி யுறுத்தியுள்ளனர்.  

   இது குறித்து கும்மிடிப் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெள்ளி யன்று (மே-26),  மனு அளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்ட குழு உறுப்பினர் ப.லோகநாதன், குடியிருப்பு வாசிகள் ஜான்சன், சாந்தகுமார், ஆப்ரகாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.