சிதம்பரம், ஆக. 7- கடலூர் மாவட்டத்தில் அரசு தேர்வுகளில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் 100 விழுக்காடு தேர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சுவாமி ஏ.எஸ்.சகஜானந்தர் பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நந்தனார் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சாராட்சியர் ராஷ்மி ராணி கலந்து கொண்டு மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் கேடயம் வழங்கினார். சிதம்பரம் சண்முக விலாஸ் குழுமத்தின் உரிமையாளர் பொறியாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.