திருவண்ணாமலை நவ 12 திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் தலித் மக்கள் ஆலய நுழைவுக்கு தடை, தேநீர் கடைகளில் டி குடிப்பதற்கு தடை, உணவகத்தில் உணவு சாப்பிட என பல்வேறு வகையிலும் தீண்டாமை கொடுமைகள் அரங்கேறி வந்தது. இத்தகைய கொடுமைகளை ஒழிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கடந்த ஆண்டில், ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. இதை யடுத்து, அங்குள்ள முத்துமாரி அம்மன் கோயிலுக்குள் நீண்ட காலத்திற்கு பிறகு தலித் மக்கள் வழிபாடு செய்தனர். 1924 ஆம் ஆண்டு அந்த கிராமத்தில் அரசு பள்ளி துவக்கப்பட்டது. அது முதல் பள்ளி மேலாண்மை குழுவில் தலித் நபர்கள் யாரையும் சேர்க்காமல் புறக்கணிக்கப் பட்டனர். தற்போது மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டத்தின் தாக்கம் காரணமாக, தென்முடியனூர் அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் தொடக்கப் பள்ளிக்கு தலைவராக கே.சத்திய சீலன், உயர்நிலைப் பள்ளிக்கு தலைவ ராக கே.பிரகாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மேலும் சி.குபேந்திரன் மற்றும் தலித் பெண்கள், தலித் இளைஞர்கள் உறுப்பி னர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை யில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்த பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், தென் முடியனூர் கிராம மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமாருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். அப்போது கட்சியின் மாநகர செயலாளர் எம்.பிரகலநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ச. குமரன், தண்டராம்பட்டு வட்டார செயலாளர் ஆர். அண்ணாமலை உள்ளிட்டர் உடனிருந்தனர்.