திருவள்ளூர், டிச. 20- கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த வேலு, அஸ்வினி தம்பதியின் மகள் நந்திதா , அங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தில், யோகா பயின்று வருகிறார். இவர், முன் புறமாக வளைந்து, உடலை முறுக்கி, இடது கை வலது காலையும், வலது கை இடது காலையும் தொடக்கூடிய, கமர் மரோதாசனம் எனும் ஆசனத்தை, ஒரு நிமிடத்தில், 45 முறை செய்து உலக சாதனை படைத்தார்.இவரது சாதனை, இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் வேல்ட்வயட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவியையும், அவரது பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை பள்ளி நிர்வாகமும், சக மாணவர்களும், பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.