districts

சென்னை முக்கிய செய்திகள்

பல்லாவரம் கூடுவாஞ்சேரி இடையே  முழுமையாக ரயில்களை ரத்து செய்யாதீர்!

நெரிசல் நேரங்களிலாவது இயக்க சிபிஐ கோரிக்கை

சென்னை,ஆக,3- சென்னை புறநகர் ரயில்கள்  பல்லாவரத்துக்கும் கூடுவாஞ்சேரிக்கும் இடையே ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல்,  ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை, முழுமையாக  ரத்து செய்யாமல்  நெரிசல் நேரங்களி லாவது இயக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : சென்னையில் வாடகை தந்து குடியிருக்க வருமானம் இல்லாத பல  லட்சம் மக்கள், நகரத்தை விட்டு 30, 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் புறநகர்க ளில் குடியிருந்து கொண்டு தினமும் சென்னைக்கு வந்து சென்று கொண்டி ருக்கிறார்கள். புறநகர் ரயில்களை நம்பியே  அவர்கள் அவ்வளவு தூரத்துக்குச் சென்றார்கள். இத்தனை நீண்ட நாட்களுக்கு  ரயில்களை நிறுத்துவது அவர்களது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ரயில்களே கூட, காலையும் மாலையும்  நெரிசலான 6 மணி நேரத்தில் போதுமானதாக இல்லை. ஒரே ஒரு ரயிலில் செல்லும் மக்க ளுக்கு குறைந்தபட்சம் 25 பேருந்துகள் தேவைப்படும். இத்தனை பேருந்துகளை சாலைகளில் இயக்குவது சாத்தியமற்றது. சென்னை நகருக்குள்ளாக, மெட்ரோ  ரயில் திட்ட சுரங்கப்பாதை அமைக்கப்படும்  போது கூட, போக்குவரத்து இயக்கம் தடைப்படவில்லை. ரயில் தடத்தில் பணிகள் நடந்தாலும், 12 நாட்களுக்கு தென்பகுதிக்கு  புறநகர் ரயில் எதுவும் கிடையாது என ரத்து செய்வது செய்திருப்பது, சாதாரண  மக்கள் நலன் மீது ரயில்வேக்கும் ஒன்றிய அரசுக்கும் இருக்கும் அலட்சியத்தைக் காட்டுகிறது. எனவே ஞாயிறன்று மட்டும் ரயில்களை நிறுத்துவதற்கும், மற்ற வார நாட்களில் நெரிசல் மிக்க நேரங்களிலாவது ரயில்களை இயக்குவதற்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடம்பத்தூரில் டிவி பார்ப்பதில் தகராறு: மாணவர் தற்கொலை

திருவள்ளூர், ஆக.3- திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் காவாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர்.இவருக்கு யுவன்சங்கர் (வயது 16), மணிரத்தினம்  (14) என்கின்ற இரண்டு  மகன்கள் உள்ளனர். வெள்ளியன்று இருவரும் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்தனர்.ஆனால் அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்று  இரவு வீட்டுக்கு கால தாமதமாக வருவது வழக்கம். அப்போது  இருவரும் டிவி சேனல் மாற்றுவது தொடர்பாக ஒருவருக்கு  ஒருவர் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து யுவன்சங்கர்  டிவி  ரிமோட்டை தூக்கி வீசிவிட்டு  தன் தம்பியிடம் கோபித்துக்  கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.இதனால்  மணிரத்தினம் மனவேதனை அடைந்து  தற்கொலை செய்து  கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து  கடம்பத்தூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மணிரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கேரளாவுக்கு எஸ்.ஆர்.எம் நிறுவனம் ரூ.1 கோடி நிதி உதவி

செங்கல்பட்டு, ஆக.3-  செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு  வரும் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி சார்பில் கேரளாவின் வயநாட்டில் உள்ள மறுவாழ்வு முயற்சிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டியின் நிறுவனர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் தனிப்பட்ட முறையில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

திருவண்ணாமலை புதிய மாநகராட்சிக்கு ஆணையராக காந்திராஜன் நியமனம்

சென்னை, ஆக.3-  புதிதாக உருவாக்கப்பட உள்ள திரு வண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு: “ கடலூர் மாநகராட்சி ஆணை யர் காந்திராஜன், புதிதாக உரு வாக்கப்படும் திருவண்ணாமலை மாநக ராட்சி ஆணையராகவும், சேலம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆர்.பூங்கொடி அருமைக்கண், சேலம் மாநகராட்சி துணை ஆணையராகவும், சேலம் துணை ஆணையர் -1 பி.அசோக்குமார், சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்கு னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மதுரை மாநகராட்சி துணை ஆணையர்-1 கே.சரவணன், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்கு னர் ஜி.தனலட்சுமி, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையராகவும், காஞ்சிபுரம் மாந கராட்சி ஆணையர் எம்.செந்தில் முரு கன் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி யாகவும், அப்பதவியில் இருந்த வி.நவிந்திரன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விடுதி மாணவர்களுக்கு முழு உடல் பரிசோதனை

திருவண்ணாமலை, ஆக.3- தமிழ்நாடு முழுவதும் தடகளம் 19, கூடைப்பந்து 23, கைப்பந்து 29, ஹாக்கி 28 என விளையாட்டில் சிறந்து விளங்கும் 97 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் தங்கி 7 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் பயிற்றுநர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் சத்தான உணவுகள் தினமும் வழங்கப்படுகிறது.  மாணவிகள் உடல் நலத்தைக் காக்கும் வகையில் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, முழு உடல் பரிசோதனை மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண்டல முதுநிலை மேலாளர் நோயலின் ஜான், விடுதி மேலாளர் சண்முகப்பிரியா மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

பெரியார் கல்லூரியில்  பனை விதை நடும் விழா

கடலூர், ஆக.3- கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட பனை விதை நடும் விழா கல்லூரி முதல்வர் ரா.ராஜேந்திரன்  தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தாவரவியல் துறைத் தலைவர் கு.நிர்மல் குமார்  ஒருங்கிணைத்தார். பொருளியல் துறைத் தலைவர் ராமகிருஷ்ண சாந்தி, நுண்ணுயிரியல் துறைத் தலைவர் மா. ஆனந்தராஜ்,  உளவியல் துறைத் தலைவர் கு. அருள்தாஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள் குறித்து கூட்டம்

விழுப்புரம், ஆக.3- விழுப்புரம் மாவட் டத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989 மற்றும் விதிகள் 1995 முதலாம் காலாண்டு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்து வர் தீபக் சிவாச்,மாவட்ட வரு வாய் அலுவலர் மு.பர மேஸ்வரி, திண்டிவனம் சாராட்சியர் திவ்யான் ஷூ நிகம், விழுப்புரம் வரு வாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பி னர்கள் தன குமரவேல், தனஞ்செழியன், கடவம் பாக்கம் மணி, அகத்தி யன் உட்பட பலர் உடனி ருந்தனர்.