கள்ளக்குறிச்சி, நவ. 4- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (நவ.4) பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட அலுவலக நுழைவு வாயிலில் சந்தேகம்படியாக பையுடன் வந்த பொதுமக்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 பாட்டில்களில் பெட்ரோல் இருந்தது. அதை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி தேவராஜ் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், கூத்தக்குடி கிராமத்தில் இருந்த 64 செண்ட் நிலத்தில் 48 செண்ட நிலத்தை தாத்தா ராமசாமி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். மீதமுள்ள 16 செண்ட் நிலத்திற்கான பட்டாவில் ராமசாமி பெயரை நீக்கிவிட்டு, அதே ஊரைச் சேர்ந்த அரசியல் பின்புலம் கொண்ட தனி நபர்கள் இருவர் ஆக்கிரமிப்பு செய்து தங்களை மிரட்டி வரு கின்றனர் என்று தெரிவித்தனர். இதற்கு வருவாய் துறை அதிகாரிகளுடன் துணை யாக இருக்கின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார் மனு அளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை என்று தெரி வித்தனர். இதனையடுத்து போலீசார், அனை வரையும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் அழைத்து சென்று புகார் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர்.