தஞ்சாவூர், ஆக. 5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைத் துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நீதிமன்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் சொந்தக் கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காலியிடத்தை புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஆய்வு செய்தார். ஆய்வின் போது தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற (பொ) நீதிபதி அப்துல் கனி, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.பாஸ்கர், பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பசுபதி, பேராவூரணி வழக்கறிஞர் சங்கச் செயலாளர் சிவேதி நடராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.