சென்னை, செப்.13- தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங் கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாண வர்கள் சேர்க்கை செய்வதற் கான கால அளவு மாணவர் களின் நலன் கருதி ஆக. 31 வரை ஏற்கெனவே வழங்கப் பட்டது. தற்போது மாணவர் களின் நலன் கருதி செப்.30 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாண வர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங் களுக்கு கல்வி சான்றிதழ்க ளுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவு தேர்வு செய்து தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள், கட்டணமில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9499055689. தொடர்பு கொள்ளலாம்