ச னியன்று காலை 58 வயது தொழில்முறை குத்துச்சண்டை வீரரும், இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்றவருமான மைக் டைசனும், 27 வயது யூடியுப்பரான ஜேக் பாலும் மோதினர். இந்த ஆட்டத்தில் 78-74 என வெறும் 4 புள்ளி வித்தியாசத்தில் ஜேக் பால் வெற்றிப் பெற்றார். மைக் டைசன் கடந்த 2005ஆம் ஆண்டிலேயே தொழில்முறை குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். அதாவது மைக் டைசன் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று 19 ஆண்டு கள் ஆகிவிட்டன. மைக்டைசன் குத்துச்சண்டை விளையாட்டை கைவிடும் பொழுது ஜேக்கிற்கு 8 வயது என்ற நிலையில், அப்பா வயதுள்ள மைக் டைசன் ஏன் ஜேக்கை எதிர் கொண்டார்? சர்ச்சைக்குரிய இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்தது யார்? வயது வித்யாசம் ஜாம்பவான் கிளைமேக்ஸ் உள்ளிட்டவைகளின் அடிப்படை தெரிந்தும் தொழில்முறை குத்துச் சண்டை சம்மேளனம் இந்த போட்டிக்கு அனுமதி அளித்தது ஏன்? என பல்வேறு சந்தேகங்களுடன் சர்ச்சைகள் வட்டமடித்து வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத் தில் மீண்டும் குத்துச்சண்டை வளை யத்துக்குள் வரப் போவதாக மைக் டைசன் தான் அறிவித்ததன் மூலமே இந்த போட்டி நடைபெற்றது என அமெரிக்க ஊடகங்கள் முட்டு கொடுத்து வருகின்றன. எல்லாம் வியாபாரம் மைக் டைசன் - ஜேக் பால் இடையே யான போட்டியை நேரில் 70 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்துள்ளனர். நேரில் கண்டுகளிக்க டிக்கெட் விலை இந்திய ரூபாய் மதிப் பில் லட்சத்திற்கும் அதிகமான தொகை யில் இருந்துள்ளது. அதேபோல நெட் பிளிக்ஸ் ஓடிடியில் கோடிக்கணக்கா னோர் பார்த்துள்ளனர். மேலும் விளம் பரம், ஸ்ட்ரீமிங் என மைக் டைசன்- ஜேக் பால் இடையேயான குத்துச்சண்டை போட்டியை வைத்து பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கில் வர்த்தக மும் நடைபெற்றுள்ளது. அதே போல வெற்றி கண்ட ஜேக்கிற்கு ரூ.337 கோடியும், தோல்வி கண்ட மைக் டைசனுக்கு ரூ.168 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வியாபாரத்திற்காக பர பரப்பை ஏற்படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் மைக் டைசன் - ஜேக் பால் குத்துச்சண்டை போட்டி நடத்தப் பட்டுள்ளது என்பது தெளிவாக தெரி கிறது.