திருவள்ளூர், நவ 12- பெரவள்ளூர் ஏரி உள்வாயிலில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் வளர்ந்திருந்த 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த 300-க்கும் மேற்பட்ட கருவேல மரங்களை பொதுப்பணித்துறையினர் அனுமதியோடு ஆக்கிரமிப்பாளர்கள் வெட்டி அகற்றியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய பெரவள்ளூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது.இந்த ஏரியின் உள்வாயிலில் சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் 40 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினரால் கிராம மக்கள் முன்னிலையில் 300 கருவேல மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் தற்போது மிகப்பெரிய மரங்களாக வளர்ந்த நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வயது முதிர்ந்த 50 கருவேல மரங்களை தனிநபர்கள் வெட்டி எடுத்துள்ளனர்.ஹ இது குறித்து கிராம மக்கள் விசாரித்த போது பொதுப்பணி துறையினரின் உதவியுடன் அகற்றப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். பொதுப்பணி துறையினரால் வைக்கப்பட்ட கருவேல மரங்கள் அழித்து சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டுள்ளனர்.