சிதம்பரம், ஜன.5- தமிழர்களின் திருவிழாக்களில் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் கரும்பும், பானையும் முக்கிய பொருளாக இடம் பெரறும். பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி, பழைய நல்லூர், சாலியன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பன்னீர் கரும்பு அறுவடையில் விவசாயிகளும் தொழிலாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் விளைந்துள்ள கரும்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலத்திற்கும் அனுப்பப்படுகிறது. பழைய நல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பள வில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டு ள்ளது. இதேபோன்று விழுப்புரம் கடலூர் மாவட்டங்களிலும் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கரும்பை கொள்முதல் செய்வதற்காக வியாபாரிகள் குவிந்துள்ளனர். தற்போது ஒரு கரும்பு ரூ.12 ரூபாய்க்கும், ஒரு கட்டு கரும்பு ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தண்ணீர் சரியான நேரத்தில் போதிய அளவு கிடைத்த தால் கடந்த ஆண்டைக் காட்டி லும் கரும்பு நன்கு செழித்து வளர்ந்துள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் நெருக்கத்தில் சென்னை, வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கரும்பு களை வாங்கிச் செல்வர்கள். மேலும், ரேசன் கடைகளுக்கும் விவ சாயிகளிடமிருந்தே கொள் முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.