districts

img

பிச்சாவரத்தில் பிரிட்டன் தூதரக ஆணையர் ஆய்வு

சிதம்பரம், ஜூலை 22-

     கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வரும் 29 ஆம் தேதி பிரிட்டன் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரசா கபே  காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

   இதனையொட்டி, பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிரிட்டன் நாட்டின் இந்திய தூதரக இணை ஆணையர் ஆலிவர் மற்றும் கிள்ளை பேரூராட்சி யின் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், வனத்துறை யினரிடம்  படகில் சென்று ஆய்வு செய்தனர்.

   இதில் ஆய்வுக்கு வரும் அமைச்சர், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் எந்த இடத்தில்  ஆய்வு செய்ய உள்ளார். அந்த இடத்தின் தன்மை எப்படி உள்ளது என்பது குறித்து முன்பணியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ள பிச்சாவரம் வனக்காடுகளில் மாங்குரோவ் மரங்கள் அதிகளவில் நட்டு மாங்குரோவ் (அலை யாத்தி) காடுகள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

   சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், வட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட வரு வாய் துறையினர் மற்றும் சுற்றுலா துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.