திருவண்ணாமலை, செப். 3- திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருக்கும் மக்க ளுக்கு பட்டா வழங்கவேண்டும் என்று வலியறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் வீடுகளை ஆய்வு செய்து வருவதால், மக்க ளின் அச்சத்தை போக்குவதற்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். திருவண்ணா மலை நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு களை ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. நகரச் செயலாளர் எம்.பிரகலநாதன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், மலை வாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செய லாளர் இரா. சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.செல்வி, ஆர். அண்ணா மலை, ச.குமரன், வழக்கறிஞர் அபிராமன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில், மாவட்ட வரு வாய் அலுவலர் ராம் பிரதீபனிடம் மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.