இந்திய அழகியல் பல் மருத்துவ சங்கத்தின் 2வது தேசிய மாநாடு
சென்னை, ஜூலை 18- பூந்தமல்லி அருகே உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் இந்திய அழகியல் பல் மருத்துவ சங்கம் சார்பில் 2வது தேசிய மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை இந்திய பல் மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் திபியேந்து மசூம்தார் துவக்கி வைத்தார். இதில் சிமாட்ஸ் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன், இணை வேந்தர் டாக்டர். தீபக் நல்லசுவாமி வீரையன், பல் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மித்ரா ஹெட்ஜ் மற்றும் செயலாளர் டாக்டர் ஆர்.எஸ். மோகன் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பேர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 530க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் 174க்கும் மேற்பட்ட அறிவியல் விளக்கங்கள் இடம்பெற்றன மற்றும் அழகிய பல் மருத்துவத்தில் முன்னணி நிபுணர்களுடன் இரண்டு நாள் கருத்தரங்கும் நடைபெற்றது. இது துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் ஆராய்ச்சியை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருந்தது.
தீக்கதிர் வளர்ச்சி நிதி
வருமான வரித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தியின் மகன் எஸ்.விக்னேஷ் - ஸ்டேபி திருமண வரவேற்பு விழா ராமபுரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியாக பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரனிடம், எஸ்.சுந்தரமூர்த்தி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
காலமானார்
திருவள்ளூர், ஜூலை 18- இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.டிக்சன் தந்தையார் ஆரோக்கியராஜ் (வயது 52), கும்மிடிப்பூண்டியில் புதனன்று (ஜூலை 17) காலமானார்.
கவரைப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், பி.துளசிநாராயணன், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், ஜி.சூரியபிரகாஷ், இ.தவமணி, என்.கங்காதரன்,முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கலையரசன், செயலாளர் டி.மதன், மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் அரவிந்த்சாமி, மத்திய குழு உறுப்பினர் மிருதுளா, மாநில துணைத் தலைவர் காவியா, மாநில துணைச் செயலாளர் பாரதி, கவுன்சிலர் ரவிக்குமார், உட்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கும்மிடிப்பூண்டியில் உள்ள மயானத்தில் ஆரோக்கிய ராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
காஞ்சிபுரம், ஜூலை 18 - காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனு அளித்தனர். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி, ம்முகாமில் திருப்புட்குழி, மேல்ஒட்டிவாக்கம் , மேல்கதிர்பூர் , விஷார் மற்றும் நரப்பாக்கம் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைதீர் மனுக்களை அளித்தனர்.
இம்முகாமில் 35க்கும் மேற்பட்ட அரசுத்துறையினர் பங்கேற்று துறை வாரியான மனுக்களை பெற்றனர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஏழிலரசன் கலந்து கொண்டு விழாவில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 28 நபர்களுக்கு மரக்கன்றுகள் நடும் பணி ஆணையை வழங்கினார்.
இதேபோல் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிலையில் சிறப்பு மருத்துவ முகாமும் அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டு அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை கள் மேற்கொள்ளப்பட்டது.