சிபிஎம் சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வியாழனன்று (நவ.15) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விருகம்பாக்கம் பகுதி 138வது வட்டக் கிளைகள் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பேசினார். சத்யா நகர் அண்ணா மெயின் ரோடு கிளைச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, இ.ரவி, பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.கந்தன், ச.ஆனந்தகுமார், வி.கார்த்தி உள்ளிட்டோர் பேசினர். ஜான் கென்னடி தெரு கிளைச் செயலாளர் எ.பச்சையப்பன் நன்றி கூறினார். முன்னதாக எம்ஜிஆர் நகர் மார்க்கெட் கிளைச் செயலாளர் டி.டேவிட் வரவேற்றார்.