வேலூர் அலமேலுரங்காபுரம் காட்பாடி பிரம்மபுரம் ஆகிய பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீரிழிவு நோய் ரத்தகொதிப்பு, வாத நோய், சிறுநீரக நோய்கள் பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டறிந்து சுகாதாரத்துறை சார்பில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆர்பிஎஸ்கே திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு நோய் கண்டறியப்பட்டு நோய்க்கான சிகிச்சைகளும் மருத்துவமனையில் அளிக்கப்படுவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.