சென்னை, நவ. 10- மாங்காட்டில் மழைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்காக பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. வியாழக்கிழமை காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது அதில் ஒருவர் முகம் குப்புற கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் இறந்து போனது தெரிய வந்தது. இதுகுறித்து மாங்காடு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையி னர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் மாங்காடு பாலாண்டீஸ்வரர் தெருவை சேர்ந்த லட்சுமிபதி (42), என்பதும், டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. வியாழக்கிழமை காலை வேலை முடித்து விட்டு வந்தவர் நிலை தடுமாறி கால்வாய்க்காக தோண்டப் பட்டு இருந்த 3 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த மழைநீரில் தலை குப்புற விழுந்த வர் எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மாங்காடு நகராட்சியில் நடைபெறும் மழை நீர் கால்வாய்க்கான பணிகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏதும் நடக்காமல் இருக்க அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.