புதுச்சேரி, அக்.3- புதுச்சேரியில் 40 ஆண்டுகளை கடந்துள்ள அமலோற்பவம் பள்ளியின் மாணிக்க விழா அக்.5 முதல் 9 வரைக்கும் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இதை யொட்டி கையேட்டை வெளியிட்டு பள்ளியின் நிறுவனர் லூர்துசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 1984 ஆம் ஆண்டு 3 ஆசிரியர்கள், 30 மாணவர்களுடன் ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டது அம லோற்பவம் பள்ளி. இன்றைக்கு மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. சிபிஎஸ்சி பள்ளி, முன் மழலையர் பள்ளி, ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட்ஸ், அமலோற்பவம் சாம்பி யன்ஸ் நிறுவனம் என பல கிளைகளுடன் இப்பள்ளி தழைத்து நிற்கிறது. 40 ஆண்டு கால வரலாற்றில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வுகளில் சாதனைகளை படைத்து வந்துள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் பங்கேற்று பாராட்டு களையும் விருதுகளையும் பெற்று வந்துள்ளனர். பள்ளியின் 40 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் வகையில் மாணிக்க விழா வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 9 ஆம் தேதி வரை என 5 நாட்கள் பள்ளியில் கொண்டாடப்படுகிறது. துவக்க விழாவில் புதுவை, கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும் அருட்தந்தையர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்கிறார்கள். இவ்விழாவையொட்டி நடைபெறும் அறிவியல், கல்வி திறன் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார். விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக 25 ஆண்டு களை நிறைவு செய்துள்ள பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி மாநில முதல்வர் ரங்கசாமி நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில் ஒன்றிய அமைச்சர், மாநில அமைச்சர்கள், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.