districts

சென்னை முக்கிய செய்திகள்

மெட்ரோ ரயில்                திடீர் நிறுத்தம் 

சென்னை ஜூலை 10-                                   சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென தீப்பொறி பறந்ததால் அவசர அவசர மாக நிறுத்தப்பட்டது. புதன்கிழமை மாலை விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் நோக்கி சென்ற பெற்றோரை உயர் நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து 300க்கும் மேற்பட்டபயணிகள் உடனடி யாக ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இத னால் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து 10 நிமிடம் தாமதமானது.

வீட்டு அலங்கார பொருட்கள் நிறுவன அறிவிப்பு

சென்னை, ஜூலை 10- மெத்தை தலையணை மற்றும் திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், குளியலறை துண்டுகள் என வீட்டு பயன்பாட்டிற்கான ஜவுளிகள் விற்பனையில் இந்தியாவின் முன்னணி பிராண்டாக  ஸ்பேசஸ் குழுமத்தின் வெல்ஸ்பன் திகழ்கிறது. இந்நிறுவனம் சென்னை யில் தங்களின் சிறந்த டீலர்களாக வேளச்சேரியில் உள்ள நியூ பஞ்சாப் ஹேண்ட்லூம் மற்றும் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்-பர்னிச்சர் ஆகியவற்றை அறிவித்துள்ளது.

கூட்டுறவுத் துறையில் சேவை குறைபாடு: விவசாயிகள் பாதிப்பு 

 திருவண்ணாமலை, ஜூலை 10- திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனுக்களில்,  திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர், சீனந்தல், தேவராயன் பாளையம், காந்தபாளையம், மேல் சோழங்குப்பம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள், கூட்டுறவுத் துறையின் சேவை குறைபாடு காரணமாக பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கூட்டுறவு சங்கத்தில் பங்குத்தொகை தர மறுப்பது, நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு, கூட்டுறவு சங்கத்தில் பணி ஓய்வு பெற்ற செயலாளரின் ஓய்வு கால பலன்களை வழங்காமல் காலம் கடத்துவது,  விவசாய கடனில் உரம் தராமல் புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட புகார்கள் குறித்து முறையீடு அளித்தனர்.  இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே வெங்கடேசன்,  செயலாளர் அ. உதயகுமார்,  பொருளாளர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருவண்ணாமலை, ஜூலை 10- திருவண்ணாமலை நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேட்டவலம் சாலை சந்திப்பில் உள்ள இணை இரண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.  அப்போது அலுவலகத்தில் கிடைத்த ரொக்க பணம் மற்றும் அலுவலர்களின் செல்போனில் இருந்த ஜிபே பரிமாற்றம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதன் ன்று (ஜூலை 10) போளூர் சாலையில் உள்ள இணை -1  சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.  துணை கண்காணிப்பாளர் திருவேல் முருகன் தலைமையில் போலீசார் நடத்திய இந்த சோதனையிலும், பணம் கைப்பற்றப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து  கட்டப்பட்டிருந்த சுவர் அகற்றம்

புதுச்சேரி, ஜூலை10- காமாட்சி அம்மன் கோவில்நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர் அகற்றப்பட்டது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கு  பெருமான  நிலத்தை போலி பத்திரம் தயாரித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் அபகரித்தனர். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரியும், தவறுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராட்டம் நடத்தியது. நிலம் ஒப்படைப்பு கோவில் நில அபகரிப்பு குறித்து நீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதன்படி நீதிமன்ற  உத்தரவை அடுத்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் போலி பத்திரத்தை ரத்து செய்யப்பட்டு,  கோவில் நிர்வாகத்திடம் மாவட்ட வருவாய்த்துறை சார்பில்  சில மாதங்களுக்கு முன்பு நிலம் ஒப்படைக்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட நிலத்தில்  அமைக்கப்பட்டிருந்த மதில்சு வரை அகற்ற கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி காலஅவகாசம் முடிந்த நிலையில் மதில் சுவர் இடிக்கும் பணி புதன்கிழமை (ஜூலை.10) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை, ஜூலை 10- சென்னை பிராட்வே மற்றும் பூந்தமல்லி இடையே இயக்கப்படும் வழித்தட எண் 53, மாநகர பேருந்தின் மேற்கூரையில் மாணவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களில் சிலர் சாலையில் ரகளை செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரும்பாக்கம் மற்றும் டிபி சத்திரம் காவல் எல்லையில், ஜூலை 5 ஆம் தேதி இந்த  ரூட்டு தல கொண்டாட்டம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். வானகரம் மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் 53 பேருந்துவழித்தடங்களை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கல்லூரிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான  கலை இலக்கிய போட்டிகள், ஆடல்பாடல் கொண்டாட்ட விழாக்கள், கல்லூரி மாணவர் தேர்தல் உள்ளிட்ட ஜனநாயகபூர்வ நிகழ்வுகள்  நடத்தாததன் விளைவே மாணவர்கள் தங்கள் திறனை பொதுவெளியில் முறையின்றி வெளிப்படுத்துகின்றனர். மாநில அரசு உடனே தலையிட்டு மாணவர்களின் மேம்பாட்டுதிறனை வளர்க்கவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளன.

மேத்தா மருத்துவமனையில்  இலவச தைராய்டு பரிசோதனை  

சென்னை, ஜூலை 10- ஆரோக்கியமான சமூகத்தை மேம்படுத்துவதற்கும், அதிகரித்து வரும் தைராய்டு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா  மருத்துவமனை வளாகத்தில் வரும் சனிக்கிழமை (ஜூலை 13) அன்று இலவச தைராய்டு பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. தைராய்டு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டும் குறைந்த செலவில் சிகிச்சைகள் கிடைப்பதை பொதுமக்களுக்கு தெரியபடுத்தவும் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் சோர்வாக உணருதல், விவரிக்க முடியாத அல்லது திடீர் எடை இழப்பு, ஆதாயம், வறண்ட சருமம், முடி உதிர்தல், வழக்கத்தை விட வேகமாக அல்லது மெதுவான இதயத் துடிப்பு, அதிக அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் ஆகியவை தைராய்டின் பொதுவான அறிகுறிகள் என்று டாக்டர் ரோஸ் ரேச்சல் கூறினார். இந்த முகாம் பற்றிய மேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்ய 9840081326 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எரிவாயு குழாயில் சேதம் விரைந்து சீரமைப்பு 

செங்கல்பட்டு, ஜூலை 10-  தமிழகத்தில் வீடுகளுக்கு எரிவாயு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக பிரதான சாலைகளில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள், தொழில்துறை, வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை (பிஎன்ஜி) விநியோகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் செங்கல்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் குழாய்களை பதித்துள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பாதைகளில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கேளம்பாக்கம் சந்திப்பு அருகே பேருந்து நிறுத்தப் பணியின் போது எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டு அதில் இருந்து எரிவாயு வெளியேறியது. இது குறித்து தகவல் அறிந்து ஏஜி&பி பிரதம் நிறுவன ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று அதை சீரமைத்தனர். பின்னர் அப்பகுதியில் எரிவாயு விநியோகம் சீரடைந்தது. இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியிலும் தெளிவான பார்க்கக்கூடிய செல்பேசி அறிமுகம்

சென்னை, ஜூலை 10- விவோ நிறுவனம் தனது ஒய் மாடல் வரிசையில் புதிய ஒய்28எஸ் மற்றும் ஒய்28இ ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.  இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியா டெக் டைமன்சிட்டி 6100+ 5ஜி செயலி மற்றும் சக்திவாய்ந்த 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன. இது நுகர்வோருக்கு தடையற்ற பயன்பாடு மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் என்றும் சூரிய ஒளியிலும் தெளிவான திரையை இந்த போன்கள் கொண்டுள்ளதாகவும் விவோ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதன் விலை 10,999 ரூபாயில் தொடங்குகிறது.

வந்தவாசியில் தமுஎகச புதிய கிளை துவக்கம்

திருவண்ணாமலை, ஜூலை 9- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசியில்  தமுஎகச கிளை தொடக்க நிகழ்ச்சி பூங்குயில் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நா.முத்துவேலன், எம்.பி.வெங்கடேசன், கடம்பை என்.ஆர்.தமிழரசு ஆகியோர் பங்கேற்று பேசினர். கிளைத்தலைவராக கவிஞர் பூங்குயில் சிவகுமார், செயலாளராக ஆசிரியை த.சாந்தி, பொருளாளராக ச.காசி ஆகி யோர்  தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் அ.அப்துல்காதர், விவ சாயிகள் சங்க வட்டார தலைவர் என்.ராதா கிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, பொருளாளர் ச.காசி நன்றி கூறினார்.