districts

img

மலை மக்கள் சங்க அமைப்பு தினம்

மலை மக்கள் சங்க அமைப்பு தினம் காஞ்சிபுரம், பிப்.15 - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 32ஆவது  ஆண்டு அமைப்பு தினத்தை யொட்டி காஞ்சிபுரம் அருகில்  உள்ள புஞ்சையரசன் தாங்கள் கிளையில் சங்க கொடி யேற்றி பெயர் பலகை புதனன்று (பிப்.14) திறக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் கொடியேற்றி சிறப்புரை யாற்றினார். தவிச மாவட்டச் செயலாளர் கே.நேரு பெயர் பலகை திறந்து வைத்தார். சங்க நிர்வாகிகள் கே.செல்வம், எஸ்.சினிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.