மெட்ரோ : கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க விரிவான திட்டம்
சென்னை, ஜன. 6- சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம் பாக்கம் விமான நிலையத் திலிருந்து பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்க அரசு ஆவன செய் யுமா? என்று சட்டப்பேரவை யில் பல்லாவரம் தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பி னர் இ.கருணாநிதி கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பதில் அளித்தபோது “வண்டலூர் அருகே கிளாம் பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக் கப்பட்டு வருகிறது. இதனால், மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டி க்க வேண்டிய அவசியம் உள் ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்தத் தடத்திற் கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறு வனத்தின் மூலமாக முடிக்கப் பட்டுள்ளது. தற்போது அரசின் ஆய் வில் உள்ள அந்த அறிக்கை யின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத்து வதற்கான நடவடிக்கை களை அரசு தொடங்கியுள் ளது” என்றார்.
வேன் - கார் மோதல்: 3 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம்,ஜன.6- அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் நிறுவனம் நடத்த தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கு புதனன்று இரவு பொன்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் காரில் ஓரிக்கை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மானாம்பதி அருகே காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் வந்தபோது எதிரே மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் மீது பயங்கரமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சுந்தரமூர்த்தி, செல்வம், சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் வேனில் இருந்த பக்தர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கார், வேனுக்குள் சொருகி இருந்தால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் கொண்டுவரப்பட்டு கார் அப்புறப்படுத்தப்பட்டது. மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக் காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.
சம்பள பாக்கியை கேட்டு லேப்டெக்னிசியன்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், ஜன 6- வீடுகள் தோறும் சென்று கொரோனா பரிசோதனை செய்து வரும், லேப் டெக்னிசியன்களுக்கு நிலுவையில் உள்ள 4மாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (ஜன-6) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஆய்வக தொழில் நுட்பனர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் கிரா மங்களில் வீடுவீடாக சென்று கொரோனா ஆய்வு செய்வது, ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்வது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு ஊதியம் வழங்க வில்லை.மேலும் அரசு அறிவித்த ஊக்கத் தொகை ரூ.15ஆயிரமும் வழங்கவில்லை. தங்களுக்கு ஊக்கத்தொகையும் நிலுவையில் உள்ள சம்பளத்தொகையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.