districts

அரசு பள்ளி மாணவிகளுக்கு கண்ணாடி

வந்தவாசி,ஜூலை 6-

     வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி நகர  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  மாணவியருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.  

    இந்த பள்ளியில் சில தினங்களுக்கு முன் வழூர் வட்டார கண் மருத்துவக் குழு வினர் மாணவர்களுக்கு கண் பரிசோ தனை மேற்கொண்டனர். இதில் கண் குறை பாடு உள்ள 25 மாணவியருக்கு இந்த கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை  பொ.பத்மாவதி தலைமை தாங்கினார். நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காளிச்செல்வம் மாணவியருக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

;