தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் சிதம்பரம் காந்தி சிலை அருகே அண்ணாமலை பல்கலைக்கழக அரசு ஊழியர் சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.