districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருவண்ணாமலை,ஜூலை 6- திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும் அடிப்படை  வசதிகளை ஏற்படுத்த கோரியும் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் திருவண்ணாமலை சுற்றுவட்டார கிராமப் பகுதி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி ஜூலை 5 ஆம் தேதி கல்லூரி முதல்வர் அலுவலகத்தில், இந்திய  மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் கல்லூரி நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இன்னும் இரண்டு தினங்களில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார், அதன் பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.