சென்னை, நவ. 19- விலைவாசி உயர்வுக்கு காரண மான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தண்டை யார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ் ணன் வலியுறுத்தினார். அரிசி, பருப்பு வகைகள், சமை யல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதி களிலும் பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான பாலியல் வன்கொடுமை களை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் தண்டையார் பேட்டையில் செயற்குழு உறுப்பி னர் ஆர்.லோகநாதன் தலைமை யில் செவ்வாயன்று (நவ. 19) தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த ஒரு வருடத்தில் 40 விழுக்காடு விலைவாசி உயர்ந்துள் ளது. 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் ஆண்டு களில் பணவீக்கம் 4 விழுக்காட்டை தாண்டாது என்று தெரிவித்தார். ஆனால் கடந்த 101 மாதங்களில் 72 மாதங்கள் பணவீக்கம் 4 விழுக் காட்டை தாண்டி விட்டது. அதில் 28 மாதங்கள் 6 விழுக்காட்டை தாண்டி விட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு காய்கறிகளின் விலை 42 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வுக்கு காரணம் வாகனங்களின் சரக்கு கட்டண உயர்வுதான். சரக்கு கட்டண உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான். சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணை விலை 18 விழுக்காடு குறைந்துள் ளது. ஆனால் ஒன்றிய அரசு பெட்ரோ லியப்பொருட்களின் விலையை குறைக்கவில்லை. கடந்த 2 ஆண்டு களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் ரூ.2.5 லட்சம் கோடி ஒன்றிய அரசு வரு மானம் ஈட்டியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது வரி விதித்ததன் மூலம் ரூ.26 லட்சம் கோடி மக்கள் பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலே அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையும் என்றார். மணிப்பூரில் நடைபெறும் கலவர த்திற்கு காரணம் அந்த மாநில முதல மைச்சரும், ஒன்றிய அரசும்தான். எனவே முதலமைச்சர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச் சாரத்தில் பிரதமர் மோடி, மீண்டும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றால் பழங்குடி மக்கள் எல்லாம் சிறுபான்மையாக மாறி விடுவார்கள், வங்கதேச மக்கள் பெரும்பான்மையாக மாறி விடுவார் கள் என்று பொய் பிரச்சாரம் செய்கி றார். மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சா ரத்தில் அமித்ஷா, மகாராஷ்டி ராவில் மீண்டும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிலத்தை முழு வதும் வக்பு போர்டுக்கு கொடுத்து விடுவார்கள் என்று கூறுகிறார். மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட லாம் என பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இப்படி பொய் பிரச்சா ரத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் கூறினார். ஒன்றிய பாஜக அரசுக்கு ஏழை களை, தொழிலாளர்களை, சாதாரண நடுத்தர மக்களை பாதிக்கும் அத்தி யாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றியெல்லாம் கவலை யில்லை. மாறாக அவர்களின் கவலையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்துதான். அதனால்தான் பல லட்சம் கோடி ரூபாய்களை தள்ளுபடி செய்கிறார் கள். கூட்டாட்சி தத்துவத்தை, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கி றார்கள். எனவே பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட அனைத்து பகுதி மக்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜ், மாநிலக்குழு உறுப்பி னர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முன்னதாக ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் வரவேற்றார். ராயபுரம் பகுதிச் செய லாளர் எஸ்.பவானி நன்றி கூறினார்.