சென்னை, ஏப். 18 - மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதை ஏற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். நொச்சிக்குப்பம் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை மேற்கு பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மாநகராட்சி அந்த கடைகளை அகற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்.12 முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமலும், சாலைகளில் கட்டுமரங்களை நிறுத்தி யும் தொடர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். மீன்பிடி மண்டலம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை செவ்வாயன்று (ஏப்.18) ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், 4 மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தி.நகர் ரங்க நாதன் தெருவை வியாபார மண்டல மாக மாற்றியுள்ளது. அதே போன்று, நொச்சிக்குப்பம் - பட்டினம் பாக்கம் வரையிலான பகுதியை பாது காக்கப்பட்ட மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார். கடற்கரையை மீனவர்கள் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சி யின் நிலைபாடு. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம். மீனவர்கள், தூய்மை பணியாளர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள் இல்லாமல் சென்னை நகரம் அசை யாது என்பதை நீதிபதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
காவல்துறை, மாநகராட்சியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் காலை, மாலை நேரங்களில் 2 மணி நேரம் போக்குவரத்திற்கு மீனவர்கள் அனுமதி அளித்துள்ளனர். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக, கடலையே நம்பியுள்ள மீன வர்களையே அகற்றுவதை எப்படி ஏற்க முடியும்? என்று கேள்வி எழுப்பி னார். கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம் என்ற பெயரில் சென்னை முதல் குமரி வரை உள்ள மீனவர்களையும், குப்பங்க ளையும் அகற்ற முயற்சிக்கின்றனர். ஓட்டல்கள் கட்டி பணம் சம்பாதிக்க ஏழைகளின் வாழ்வாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது. ஏப்.12 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும். வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடை பெறும் மீனவர்களின் போராட்டம் தொட ரும். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும். லூப் சாலை என்பதை சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். இந்நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.