சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.25 கோடியில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாநகர மேயர் பிரியா, சட்டமன்ற, உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.