ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வனத்துறை
பொன்னேரி,பிப்.12- நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமை கள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் பழவேற் காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையி னர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டை களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை யினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாது காக்கப்பட்டு குஞ்சு பொறித் தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.இதற்கிடையே பழவேற் காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து விடு கின்றன.
சாலை தடுப்பில் ஆட்டோ மோதி ஓட்டுநர் பலி
சென்னை, பிப். 12- சென்னை அருகே சோழிங்கநல்லூரில் சாலைத் தடுப்பில் ஆட்டோ மோதிய விபத்தில், ஓட்டுநர் உயிரிழந்தார். துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சாலைமா நகர் அருகே உள்ள மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ம.மகாலிங்கம் (45). மாற்றுத் திறனாளியான இவர், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். மகாலிங்கம் சோழிங்கநல்லூர் கே.கே.சாலையில் திங்கட்கிழமை காலை சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே பணி நடைபெறுவதால், மெட்ரோ நிறுவனம் வைத்திருந்த தடுப்பை கவனிக்காமல் சென்றதால், நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு மீது ஆட்டோ மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மகாலிங்கம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் கண் பரிசோதனை முகாம்
திருவள்ளுர்,பிப்.12- திருவள்ளுர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 15.01.2024 முதல் நடைபெற்று வருகிறது. 25ஆம் நாள் நிகழ்ச்சியாக திங்களன்று (பிப்.12) திருவள்ளுர்.. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சிதலைவர் பிரபு சங்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துரைத்தார்.
கடலூர் அருகே செம்மண் குவாரியில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
கடலூர், பிப்.12- கடலூர் அருகே உள்ள எம்.புதூர் பகுதி யில் விழுப்புரம் -நாகப்பட்டினம் சாலை அமைப்பதற்காக தனியார் நிறுவனம் மூலம் மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து தினந்தோறும் நூற்றுக் கணக்கான வாகனங்களில் செம்மண் கிராவலை கொண்டு சென்று சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் திங்களன்று (பிப்.12) 10க்கும் மேற்பட்ட லாரி உரிமை யாளர்கள், குவாரிக்கு நேரில் சென்றனர். பின்னர் கிராவல் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி உரிமை யாளர்களிடம் சமரசம் செய்தனர். அப்போது லாரி உரிமையாளர்கள் பேசுகையில், கிராவல் மண் எடுப்பதற்கு வரிசையின் அடிப்படையில் லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட வேண்டும் ஆனால் தனியார் குவாரி நிறுவனத்தினர் சட்ட விரோதமாக பல்வேறு லாரிகளுக்கு கிராவல் மண்ணை வழங்குகின்றனர். இதன் காரணமாக கிராவல் மண் சட்ட விரோதமாக வெளியிடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத னால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படு கிறோம். எனவே இது குறித்து உரிய விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்ததை யடுத்து லாரி உரிமை யாளர்கள் கலைந்து சென்றனர்.
கருவுறாமை குறைபாடுகளுக்கு ஆண்களே அதிக காரணம் : மருத்துவர்கள் தகவல்
சென்னை, பிப், 12- பொதுவாக குழந்தையின்மைக்கு பெண்களை குறைசொல்வதே நமது இந்திய சமூகத்தில் பழக்கமாக உள்ளது. இதனால் பல பெண்கள் மனதளவிலும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது தம்பதிகள் கருதரிக்க முடியாமல் இருப்பதற்கு பெண்களை விட ஆண்களே அதிக காரணமாக இருப்பதாக மருத்துவ உலகில் இருந்து வருவம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள ஆசிய சிறுநீரகவியல் சிகிச்சை மையத்தின் (ஏஐஎன்யூ) மருத்துவ ஆலோசகரும், ஆடவர் நோயியல் (ஆண்ட்ராலஜி) நுண் அறுவைசிகிச்சை மற்றும் சிறுநீரக பராமரிப்பு துறை மருத்துவ ருமான டாக்டர் சஞ்சய் பிரகாஷ் கூறுகை யில், கருவுறாமை குறைபாடு உள்ளவர்க ளின் மொத்த எண்ணிக்கையில் ஆண்க ளின் பங்களிப்பே மிகவும் அதிகமாக உள்ளதாக கூறினார். 40 முதல் 50 சதவிகிதம் வரையிலான ஆண் மலட்டுத்தன்மையானது குறைந்த விந்தணு எண்ணிக்கையினால் தான் என்றும் இதனால் பல ஆண்களுக்கு குழந்தைக்குத் தந்தையாகும் வாய்ப்பு இல்லாமல் போகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஆணுறுப்பு விறைப்புத்தன்மை குறைபாடு அதிகமாக உள்ளது, இது 40 வயதுக்குட்பட்ட ஆண்க ளில் சுமார் 30முதல் 35விழுக்காட்டினரை பாதிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் மருத்துவ அறிவியல் உலகில் நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ள தால் இந்த குறைபாட்டில் இருந்து ஆண்கள் விடுபடமுடியும் என்றும் அவர் கூறினார். வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள்,சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றால் ஏற்படும் இந்த பாதிப்புகளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் ஆகியவற்றால் முன்கூட்டியே தவிர்க்கமுடியும் என்றும் என்றும் அவர் கூறினார்.
பொதுவழியில் இடையூறாக கழிவு நீர் தொட்டி
கடலூர், பிப்.12- பொதுவழியில் இடையூறாக கழிவு நீர் தொட்டி இருப்பதாகவும் அதை அகற்றவேண்டும் என்றும் சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி கல்விக்கரசி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கீரப்பாளையம் ஒன்றியம், சாக்கங்குடி ஊராட்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் பாதையாக பயன்படுத்தி வரும் பொது வழியில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் கழிவு நீர் தொட்டி அமைத்துள்ளார். இவர் ஊராட்சியில் பணிதள பொறுப்பாளராக உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதோடு வட்டாட்சியருக்கு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி அதை அகற்றுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பினார். மூன்று மாதம் ஆகியும் இதுவரை அந்த கழிவுநீர் தொட்டி அகற்றப்படாமல் உள்ளது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சில்லறை காசுகளுடன் ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி
கடலூர்,பிப்.13- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகள் பகுதிக்கு சென்று ஆட்சியர் அருண் தம்புராஜ் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த எம். புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த சிவபாலன் என்ற மாற்றுத்திறனாளி, தனது மனுவுடன் சில்லறை காசுகளையும் வைத்து ஆட்சியரிடம் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நானும் எனது மனைவியும் மாற்றுத்திறனாளிகள் நாங்கள் மிகவும் வறுமையின் பிடியில் இருக்கும் எங்களுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் கேட்டு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.