மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும், முதலமைச்சரின் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.7) நந்தனத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட தலைவர் பி.எஸ்.அப்பர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கி.இளமாறன் பேசினார். மாவட்டச் செயலாளர் என்.ராமசாமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.