சென்னை, டிச. 19- திருவொற்றியூரில் வாழ்வாதாரம் பாதித்த மீனவர்கள் தங்களுக்கும் நிவார ணத் தொகை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மிக்ஜம் புயல் மழையின் போது மணலி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியான எண்ணை கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து முகத்துவாரம் வழியாக கடலில் கல ந்தது. இதனால் தண்ணீருடன் கலந்து எண்ணையும் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. கடலில் கலந்ததால் மீனவர்க ளின் படகு, வலைகள் மீதும் எண்ணை படிந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதித்ததோடு, பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்நிலையில் எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதமடைந்த படகுகளுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை அறிவித்தது. இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியில் உள்ள 13 மீனவ கிராம மக்களும் தாங்களும் மீன் பிடிக்கச் செல்லாமல் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், தங்க ளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டு சுங்கச்சாவடி முதல் எர்ணா வூர் வரை ஊர்வலமாக சென்று எண்ணூர் விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், காவல் உதவி ஆணையர் சிதம்பரம் முருகேசன் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உங்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப் படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலா ளர் எல்.சுந்தரராஜன் கூறுகையில், எண்ணை படலத்தால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் பிடிக்கச் செல்லாமல் வாழ்வா தரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து மீனவர்களுக்கும் அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றார்.