districts

சென்னை முக்கிய செய்திகள்

ஊதுவத்தி ஆலையில்  தீ விபத்து

கடலூர், ஜூலை.28- கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த  தொரப்பாடி பகுதியை சேர்ந்த  ராஜேந்திரன் இவர் அதே பகுதியில் அகர்பக்தி சாம்பிராணி கம்பெனி நடத்தி வந்துள்ளார்.  இந்த நிலையில் கம்பெனி வழக்கம் போல் காலை முதல் மாலை வரை உற்பத்தி பணியில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.  இந்த நிலையில் சனிக்கிழமை பணிகள் முடிந்து ஊழியர்கள் வீடு திரும்பி நிலையில்  இரவு  திடீரென தீ பிடித்து எரிவதாக தீயணைப்புத் துறைவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள் தீ மள மளவென எரிந்து கம்பெனி முழுவதும் கரும் புகை மூட்டத்துடன் பரவியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி  தீயணைப்பு துறை  வீரர்கள்  தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர் ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததை நிலை ஏற்பட்டது. விபத்துகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள்  சங்க பள்ளிப்பட்டு மாநாடு

திருவள்ளூர், ஜூலை 28- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் பள்ளிப்பட்டு வட்ட முதல் மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 27), பொதட்டூர்பேட்டையில் நடைபெற்றது. நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற வட்ட மாநாட்டை கணேசன் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் சி.பெருமாள் மாற்றுதிறனாளிகள் சங்க திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.கீதா  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக அனைத்து வகை மாற்று திறனாளிகள் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் நிரைவுரையாற்றினார். அடையாள சான்று உதவி தொகை, நூறு நாள் வேலை,  பேருந்து மற்றும் ரயில் பாஸ் ஏஏஒய் திட்டத்தில்  சேர்த்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் பள்ளிப்பட்டு வட்ட தலைவரக தண்டபாணி, செயலாளராக நந்தகுமார்,  பொருளாதார ஞானமணி உள்ளிட்ட 13 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர்.

தா.பி.சத்திரம் பகுதியில் போதைப்பொருள் அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 28 - போதைப்பொருள் அதிகரிப்பால் தா.பி.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கீழ்பாக்கம் துணை ஆணையர் அதிவீரபாண்டியனை சனிக்கிழமையன்று (ஜூலை 27) கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் செல்வா சந்தித்து பேசினார். அப்போது, கே-6 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குற்றச்செயல் அதிகரித்துள்ளது. மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கடந்த மே மாதம் 25ந் தேதி, தா.பி.சத்திரம் 9வது குறுக்குத் தெருவில் உள்ள பி.ரங்கநாதன் வீட்டிலிருந்து 35 சவரன் நகை மற்றும்  பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதன்மீது புகார் அளித்தும் காவல்துறை போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எனவே, இதிலும் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்வின்போது கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வே.ஆறுமுகம், கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.மணிகண்டன், அண்ணாநகர் பகதிக்குழு உறுப்பினர்கள் த.சுகுமார், பி.சீனி வாசன், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு ஆகியோர் உடனிருந்தனர்.

மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

காசா, ஜூலை 28 - காசாவில் டெயிர் அல்-பாலா பகுதி யில் அமைந்துள்ள மருத்து வமனை மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை (ஜூலை 27) நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டி ருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த கொடூர தாக்குதல் களில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர். அவர்களில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

லலித்கலா அகாடமியில் ஓவியக் கண்காட்சி

சென்னை, ஜூலை 28- சென்னை லலித்கலா அகாடமியில் தெய்வீக முகங்கள் என்ற தலைப்பில்  ஜூலை 25 ந்தேதி முதல் 30 ந்தேதி வரையில் தெய்வீக முகங்கள் என்ற தலைப்பில் ஓவியக்கண்காட்சி  நடைபெற்று வருகிறது கண்காட்சியை அகாடமி யின்  செயலாளர் சோவன் குமார் துவக்கி வைத்தார். ஓவியர்கள் ஜெயக்குமார், ராஜா, கோவிந்தராஜன், அருணகிரி ஆகிய 4 பேரின் படைப்புகள் இடம் பெற்றுள்ள இந்த ஓவியக் கண்காட்சியை ஏராள மானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

சிறுவர்களுக்கு நூதன தண்டனை

 விழுப்புரம், ஜூலை 28- போக்சோ வழக்கில் கைதான 2- சிறுவர்களுக்கு விழுப்புரம் இளம் சிறார்கள் நீதிமன்றம்நூதன தண்டனை  வழங்கியது. விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்ய முயன்றனர்.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் அந்த சிறுவர்கள் இருவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் இளம்சிறார்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன், 3 ஆண்டுகள் மாதம் ஒருமுறை திண்டிவனம் வட்ட தாசில்தாரின் உத்தரவுப்படி 5 மரக்கன்றுகளை வாங்கி அவர் கூறும் இடத்தில் நட்டு பராமரித்து வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.