திருவண்ணாமலை, அக்.18- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் வெள்ளி யன்று (அக்.18) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள், அடை யாள அட்டை இல்லாமல், தங்களின் பதவி பொறுப்புகள் குறித்து விவசாயி களுக்கு தகவல் தெரிவிக்காமல் கூட்டத்தை நடத்தத் தொடங்கினர். கூட்டம் தொடங்கியதும், அருணாச் சலம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.168 கோடி மற்றும் தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ. 106 கோடியை பெற்றுத்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் தீர்க்க வில்லை. திருவண்ணாமலை அருகே, தனியார் கொள்முதல் நிறுவனம் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணம் ரூ.3 கோடியை பெற்று தரவில்லை. பால் உற்பத்தி விவசாயிகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் ஊக்கத் தொகையை கடந்த நான்கு மாதங்க ளாக வழங்கப்படவில்லை என வரிசையாக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அடுக்கினர். மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வேளாண் துறை இணை இயக்குநர் என யாரும் வராமல் பெயரளவுக்கு கூட்டம் நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி .கே. வெங்கடே சன், பொருளாளர் அருண் குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.