விழுப்புரம்,டிச.22- விழுப்புரம் கோட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் உளுந்து விதைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வானூர், கண்டாச்சிபுரம் ஆகிய 5 வட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசுகையில் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவ சாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கான பணம் பட்டுவாடா செய்வதில் ஒரு மாதம் ஆகிறது.
இதனால், விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலைமை உள்ளது.விரைந்து பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விதைப்பு பருவத்திற்கு தேவையான உளுந்து விதை தட்டுப்பாடு உள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் நடப்பு சாகுபடியில் உளுந்து விதைகள் அதிகம் தேவை இருப்பதால் போது மான அளவு வேளாண்மை துறை இருப்பு வைத்திருக்க நடவடிக்கை வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள், வரத்து வாய்க்கால்களை மழைக்காலத்திற்கு முன்பு தூர்வார கோரிக்கை வைத்தோம். ஆனால் இதை சரி செய்ய சரியான திட்டமிடல் இல்லாததால் குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆனால் விழுப்புரம் கோட்டத்தில் கால்நடை டாக்டர்கள் பற்றாக்கு றையாக இருப்பதால் 2, 3 நாட்க ளுக்கு ஒருமுறைதான் கால்நடை மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் மாடுகளுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கோட்டாட்சியர் ஹரிதாஸ், விவசாயிகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் ஒரு வாரத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.