ராணிப்பேட்டை, செப். 25 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரு கிறது. இதை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா புத னன்று (செப். 25) துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் அறிவழகன், கல்லூரி முதல்வர் விஜய லட்சுமி, கல்லூரி துணை முதல்வர் மைதிலி உடனிருந்தனர்.