சென்னையில் சனிக்கிழமை (டிச.14) காலமான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், வெ.ராஜசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.