districts

img

பொது போக்குவரத்தை பாதுகாக்க ஊழியர் சங்க பேரவை தீர்மானம்

திருவண்ணாமலை, செப். 29-  திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் 13 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி துவக்கி வைத்தார். துணைத் தலை வர் எம். வீரபத்திரன் கொடியேற்றி வைத்தார். துணைத் தலைவர் ஏ.சுதர்சனம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணை பொதுச்செயலாளர் ஏ.தமிழழகன் வர வேற்றார்.   துணை செயலாளர் எஸ்.முரளி செயலாளர் அறிக்கையும், பொருளாளர் கே.தாமோதரன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். சம்மேளன குழு உறுப்பினர் வாழ்த்துரை வழங்கினார், துணைப் பொதுச் செயலாளர் வி. தயானந்தம் நிறைவுறையாற்றினார்.  புதிய நிர்வாகிகளாக, ஏ.சேகர் (தலைவர்), எஸ்.முரளி (செயலாளர்), கே.தாமோதரன் (பொருளாளர்) மற்றும் 15 பேர் கொண்ட நிர்வாக குழு  தேர்வு செய்யப்பட்டது.  இந்த பேரவையில் பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், தொழிற்சங்க அங்கீகாரம், தொழிற்சங்க சட்டங்களை, முத்தரப்பு ஒப்பந்தங்களை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை செயலாளர் எம்.ஜெயக்குமார் நன்றி கூறி னார்.முன்னதாக மண்டல தலைவர் ஏ.சேகர் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தை  கே. நாகராஜன் துவக்கி வைத்தார்.