districts

img

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: ஆடுகள் விற்பனை அமோகம்

செஞ்சி, ஏப். 29- விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது.  இந்த சந்தையில் சென்னை, புதுவை, பெங்களூர், திரு வண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து வியாபாரிகள் வழக்கமாக ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். அதன்படி இந்த வாரம் (ஏப். 29) ஆட்டு சந்தை கூடியது. ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. கிராமங்களிலிருந்து விவசாயிகள் அதிகாலை யிலேயே வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.