காஞ்சிபுரம், ஜூலை 5 - காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட குருவிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய கட்டி டத்தின் மேல்தள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்துள்ள குருவி மலையில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் வகுப்பறை பற்றாக் குறை ஏற்பட்டதையடுத்து, சுமார் 61 லட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட் டுள்ளது. கடந்த மார்ச் மாதம்தான் புதிய கட்டிடடங்கள் திறக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று (ஜூலை 5) காலை 9 மணிக்கு வழக்கம் போல் காலை வணக்கம் நிகழ்வில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஈடு பட்டிருந்தனர். அதே நேரத்தில் புதிய கட்டிடத்தில் உள்ள ஒரு வகுப்பறை யின் மேல்தள சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மின்விசிறி உள்பட பல்வேறு பொருட்கள் சேத மடைந்தன. மாணவர்கள் யாரும் வகுப்பறையில் இல்லாததால் நல் வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும் மேற்கூரை சேதம் அடைந்த வகுப்பறை கட்டி டத்தின் அருகே மாணவர்கள் செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பெற்றோர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தக வலின் பெயரில் வட்டார வளர்ச்சி அலு வலர் கோமலா நேரில் வந்து பள்ளி பார்வையிட்டார். அப்போது அவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் வட்டச் செயலாளர் எஸ்.பழனி இதுகுறித்து மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் . அந்த மனுவில், மாணவர்களின் நலன் கருதி பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு புதிய கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும். கட்டிட ஒப்பந்ததாரர் எடேமேச்சேரி வெங்க டேசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சுப்புராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்த மதிப்பீடு தொகை யை முழுமையாக அரசு கருவூலத் திற்கு திரும்ப பெறுவதோடு, பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்த பின்னர் மாணவர் களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள் ளது.