பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற காஞ்சிபுரம் வீராங்கனை துளசிமதியை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் பி.பி.பாலாஜி மாவட்டப் பொருளாளர் வி.அரிகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நினைவு பரிசு அளித்து பாராட்டினர். காஞ்சிபுரம் நகரத் தலைவர் எம்.லோகநாயகி, வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் டில்லிபாபு, பொருளாளர் செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.