districts

img

நீரிழிவு நோயாளிகள் கால்களை பரிசோதிக்க வேண்டியது அவசியம்

சென்னை, ஆக.7- நீரிழிவு நோயா ளிகள் ஆரம்ப நிலையிலேயே கால்களை பரி சோதிக்க வேண்டி யது அவசியம் என்று பிரபல நீரி ழிவு மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். நீரிழிவு நோயாளிகள் குறித்து அகில இந்திய அளவில் 23 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (பிஎம்ேஜ) வெளியாகியுள்ளது. ஆய்வில் 54ஆயிரம் நீரிழிவு நோயாளிகளின் கால்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில் நான்கில் ஒரு பங்கினருக்கு கால்களில் பாதிப்பு  ஏற்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பது தெரியவந் துள்ளது என்று மருத்துவர் தெரிவித்தார். நீரிழிவு நோயாளிகளின் வயது அதிகரிக்க அதிகரிக்க இதற்கான வாய்ப்புகளும் அதிகரிப்பதாக அவர் கூறினார். கட்டுப்பாடற்ற  சர்க்கரைநோய் உள்ளவர்கள் விரைவாக கால்களில் பாதிப்பை எதிர்கொள்ளும் பிரிவில் உள்ளனர். தமிழகத்தில் இந்த ஆய்வில் கலந்துகொண்ட சர்க்கரை நோயாளிகள் 12 ஆயிரத்தி 719 பேரில் 17.4 விழுக்காட்டினருக்கு  கால்களில்  பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறினார். எனவே சர்க்கரை நோயாளிகள் மருத்துவரை  சந்திக்கும் போது கட்டாயம் கால்களை அவரிடம் காட்ட வேண்டும் என்றும் வெறும் கால்களில் கோவிலுக்கு கூட  செல்லக்கூடாது என்றும் தேவைப்படும பட்சத்தில் சாக்ஸ் அணிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்