கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,தேவபாண்டலம் சாவடி தெருவில் அப்துல் கலாம் நினைவு திடலில் ஆட்டோ தொழிலாளர் சங்க சிஐடியு புதிய கிளையின் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் எ.பாலகிருஷ்ணன் தலைமை ஏற்க, செயலாளர் ஜி.முத்துவேல்,சாலை போக்குவரத்து மாநில பொதுச் செயலாளர் வி.குப்புசாமி,ஒன்றிய கவுன்சிலர் அ.பாண்டலம் ச.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.