விசவாயு மரணங்களை தடுத்திட உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் இ.சங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாநில துணை பொது செயலாளர் க.சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா ஆகியோர் பேசினர்.