குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது, தேர்தல் வாக்குறுதியின்படி 10 வருடம் பணிபுரிந்த என்.எல்.யு.எம். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் ராயபுரம் மண்டலம் 5, வடக்கு வட்டார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் பட்டாபி, பொதுச்செயலாளர் சீனிவாசலு, துணைப் பொதுச்செயலாளர்கள் முனுசாமி, ராஜன், நிர்வாகிகள் வரதராஜன், செல்வம், மணி ஆகியோர் பேசினர்.